எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உயர் நீதிமன்றம் உத்தரவு: நளினி ஏமாற்றம்!

ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி விருதம்பட்டு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு இன்று விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறையில் முருகனை சந்தித்தார்.

News image
Updated On :17 ஜூன் 2022, 8:05 am

DIN

வேலூர்: ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி விருதம்பட்டு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு இன்று விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறையில் முருகனை சந்தித்தார். ஆனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி அவர் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை கிடைக்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.

பரோலில் இருப்பதால் விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு நளினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு நளினி கையொப்பம் இட்டார். இந்த நிலையில் பின்னர் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முருகனை சந்திக்க சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு பேசிவிட்டு வந்தார்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய முடியாது என கூறியதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.