மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உயர் நீதிமன்றம் உத்தரவு: நளினி ஏமாற்றம்!

ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி விருதம்பட்டு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு இன்று விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறையில் முருகனை சந்தித்தார்.

News image
Updated On :17 ஜூன் 2022, 8:05 am

வேலூர்: ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி விருதம்பட்டு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு இன்று விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறையில் முருகனை சந்தித்தார். ஆனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி அவர் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை கிடைக்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.

பரோலில் இருப்பதால் விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு நளினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு நளினி கையொப்பம் இட்டார். இந்த நிலையில் பின்னர் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முருகனை சந்திக்க சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு பேசிவிட்டு வந்தார்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய முடியாது என கூறியதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.