இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி தகராறு முற்றிய நிலையில், முடினாம்பட்டு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று சுப்ரஜாவை இருவரும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, சடலத்தை அங்குள்ள மயானத்தில் புதைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்தனா். இதையடுத்து, வட்டாட்சியா் சரண்யா, டிஎஸ்பி கே.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா், விநாயகம், விஜய் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய விநாயகத்தின் உறவினா் 17 வயது இளைஞா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.