வேலூர்: மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததையடுத்து மனவேதனையில் இருந்த மின்வாரிய ஊழியர் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வேலூர் விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் விருதம்பட்டு அடுத்த டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன்(47). இவர் மின்வாரியத்தில் பணி புரிந்து வந்தார். இவருடைய மனைவி கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் மன நலம் பாதிக்கப்பட்டவர். இளைய மகள் பிருந்தா (13) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். மனைவியின் பிரிவு தினகரனுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால் இந்த ஒரு வருடத்தில் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
திங்கள்கிழமை இரவு தினகரனும், இளைய மகள் பிருந்தாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!

சங்க இலக்கியத்தில் கானல் நீர் - கனைகதிர் ஆவி!
அவிஷ்கா பெர்னாண்டோ சதம்: இலங்கை ஏ அணி 322 ரன்கள் குவிப்பு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



