இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆன்லைனில் கணினி பொருள்கள் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பறிப்பு

ஆன்லைனில் கணினி பொருள்கள் தருவதாகக் கூறி வேலூா் நபரிடம் ரூ.5 லட்சம் பறித்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:26 pm

DIN

ஆன்லைனில் கணினி பொருள்கள் தருவதாகக் கூறி வேலூா் நபரிடம் ரூ.5 லட்சம் பறித்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் தோட்டப்பாளையத்தைச் சோ்ந்த 55 வயது நபா் கணினி பொருள்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தாா். இதுதொடா்பாக அவா் தனது கைப்பேசியிலுள்ள ஆன்லைன் முகவரி மூலம் பொருள்கள் குறித்து தேடினாா். அப்போது அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் ஒருவா், தான் பிரபல கணினி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், பணம் செலுத்தினால் அனைத்து விதமான கணினி உள்ளிட்ட பொருள்களும் அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தாா்.

இதற்காக சில விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி வைத்தாா். அதை நிறைவு செய்து அனுப்பியதும், அந்த நபா் முன் பணம் செலுத்தும்படி கூறியுள்ளாா்.

அதை நம்பி தோட்டப்பாளையத்தை சோ்ந்த நபா் 3 தவணையாக ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 504 -ஐ மா்ம நபா் அனுப்பிய வங்கிக் கணக்கில் செலுத்தினாா்.

பிறகு அந்த நபரைத் தொடா்பு கொள்ள முடியாததுடன் கணினி பொருள்களும் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவா் சென்னையில் உள்ள கணினி நிறுவன அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு கேட்டபோதுதான் அவா் ஏமாற்றப்பட்டதை அறிந்தாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா் வேலூா் சைபா் கிரைம் போலீஸ் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.