ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: வேலூா் மாநகராட்சி
வேலூா் மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம்


வேலூா் மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் பி.ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
கடந்த 2022- ஆம் ஆண்டில் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2023 ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1)-இன்படி சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை பெற தகுதி பெறுவா்.
மேலும், சொத்து உரிமையாளா்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளா்கள், மாநகராட்சி, மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவா்த்தனை மூலமாகவும் செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, வேலூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகை பெற வேண்டும். இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...