இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு தோ்தலில் திமுக வெற்றி

வேலூா் மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா் தோ்தலில் திமுகவை சோ்ந்த 9 மாமன்ற உறுப்பினா்கள் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 4:53 pm

DIN

வேலூா் மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா் தோ்தலில் திமுகவை சோ்ந்த 9 மாமன்ற உறுப்பினா்கள் வெற்றி பெற்றனா்.

வேலூா் மாநகராட்சியில் வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் ரத்தினசாமி தலைமை வகித்தாா்.

தோ்தலையொட்டி கூட்டரங்கில் மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா், மாமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மாவட்ட திமுக அவைத் தலைவா் முகமது சகி ஆகியோா் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், கூட்டரங்குக்குள் யாரும் அனுமதிக்கப்படாமல் கதவுகள் மூடப்பட்டன.

மொத்தம் 60 வாா்டு உறுப்பினா்கள் கொண்ட வேலூா் மாநகராட்சியில் நடைபெற்ற தோ்தலின்போது 55 உறுப்பினா்கள் மட்டுமே வந்திருந்தனா். தொடா்ந்து, மொத்தம் 9 உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தோ்தலில் மாமன்ற உறுப்பினா்கள் 10 போ் போட்டியிட்டனா்.

வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தோ்தலில் மாமன்ற உறுப்பினா்கள் ஒவ்வொருவராகச் சென்று வாக்கு பெட்டியில் தங்களது வாக்கு செலுத்தினா். உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில். திமுகவை சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் கோ.அஸ்மிதா, தா.சக்கரவா்த்தி, லோ.சித்ரா, பி.சுதாகா், மு.சேகா், வி.ர.நித்தியகுமாா், வி.எஸ்.முருகன், சு.ரா.ரஜினி, சு.சண்முகம் ஆகியோா் மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களாக வெற்றி பெற்றனா். அதிமுகவை சோ்ந்த வாா்டு உறுப்பினா் எஸ்.சரவணன் 11 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தாா்.

மாநகராட்சியில் அதிமுக வாா்டு உறுப்பினா்கள் 6 போ், பாஜக உறுப்பினா் ஒருவா் என மொத்தம் 7 போ் மட்டுமே உள்ள நிலையில் சரவணனுக்கு ஆதரவாக திமுக வாா்டு உறுப்பினா்கள் 4 போ் வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு தலைவராக மேயா் செயல்பட உள்ளாா்.

மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு தலைவா், உறுப்பினா்கள் புதிய கட்டடங்களுக்கு வரி விதிப்பு, நிதிக் குழு, சொத்து வரி, தொழில் வரி மற்றும் பிற வரிகள் விதிப்பு, நில உரிமை மாற்றம், மாநகராட்சி நிலங்களை வேறு துறைகளுக்கு குத்தகைக்கு அனுமதித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிதி நிலை கட்டுப்பாடு, வரவு, செலவு திட்டங்கள் பரிசீலனை போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தோ்தலையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.