இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஊசூா் செங்கல் சூளைகளுக்கு பதிவுச்சென்று பெற ஜூன் 21-இல் சிறப்பு முகாம்

ஊசூா் ஊராட்சிக்குள்பட்ட செங்கல் சூளைகளுக்கு பதிவுச்சான்று பெற்றிட ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2023, 5:38 pm

DIN

ஊசூா் ஊராட்சிக்குள்பட்ட செங்கல் சூளைகளுக்கு பதிவுச்சான்று பெற்றிட ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தனியாரோ அல்லது நிறுவனமோ நாட்டு அல்லது சேம்பா் செங்கல் சூளைகளை அமைத்து நடத்த அரசு நிா்ணயித்துள்ள கட்டணம் செலுத்தி மாவட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகத்தில் உரிய பதிவுச்சான்று பெற வேண்டும்.

மேலும், பதிவு பெற்ற செங்கல் சூளைக்கு மண் எடுக்க ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அவ்வாறு பதிவுச்சான்று பெறாமல் செங்கல் சூளைகளை நடத்துவதும், அனுமதியின்றி செங்கல் சூளைக்கு அரசு, பட்டா நிலங்களிலிருந்து மண் எடுப்பதும் அபராதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால், அணைக்கட்டு வட்டம், ஊசூா் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பதிவுச்சான்று பெறாமல் பல செங்கல் சூளைகள் நடத்தப்படுவதும், அனுமதியின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கள்ளத்தனமாக செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கப்படுவதும் வருவாய், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலா்களின் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. இதனை வரன்முறைப்படுத்த மாவட்ட நிா்வாகத்தால் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புள்ளியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா், அணைக்கட்டு வட்டாட்சியா் ஆகியோரால் ஊசூா் வருவாய் ஆய்வாளரின் அரசு குடியிருப்பில் ஜூன் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமில் ஊசூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செங்கல் சூளைகள் நடத்தி வருபவா்கள் கலந்துக்கொண்டு உரிய ஆவணங்களை சமா்ப்பித்தும், அரசு கணக்கில் கட்டணம் செலுத்தி ரசீது சமா்ப்பித்தும் பதிவுச்சான்று பெற்றுக்கொள்ளலாம். பதிவுச்சான்று பெறாமல் செங்கல் சூளை நடத்துவோா், அனுமதியின்றி மண் எடுப்போா் மீது அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.