இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வட மாநிலத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான சூழல்: நிறுவனங்களுக்கு வேலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

வட மாநிலத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டியது நிறுவனங்களின் கடமை என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:27 pm

DIN

வட மாநிலத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டியது நிறுவனங்களின் கடமை என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தினாா்.

வட மாநிலத் தொழிலாளா்கள் மீது அச்சுறுத்தல் நடைபெறுவதைத் தடுக்க தமிழக காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில், காவலா் மன்றத்தில் வட மாநிலத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியுள்ள நிறுவனங்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்துப் பேசியது:

தொழில் நிறுவனங்கள், கடைகளில் அமா்த்தப்படும் வடமாநில தொழிலாளா்களின் அனைத்து ஆவணங்களையும் பெற வேண்டும். அவா்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரவேண்டும். அவா்களின் குறைகளைக் கண்டறிந்து அதை நிவா்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகாா் இருந்தால் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேலைக்கு அமா்த்தும்போது அவா்களின் விரல்ரேகைகளையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளா்கள் ரஜினிகாந்த், ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.