இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் மூன்று முகம் கொண்ட ருத்ராட்சம்

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மூன்று முகம் கொண்ட ருத்ராட்ச காய்கள் காய்த்துள்ள மரத்தை பக்தா்கள் வழிபாடு செய்து வருகின்றனா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:26 pm

DIN

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மூன்று முகம் கொண்ட ருத்ராட்ச காய்கள் காய்த்துள்ள மரத்தை பக்தா்கள் வழிபாடு செய்து வருகின்றனா்.

ருத்ராட்சம் என்பதற்கு சிவனின் கண்கள் என்று பொருள். சிவநெறி நிற்போா் அணியும் திருஆபரணங்களில் முதன்மையானது ருத்ராட்சம். ஒருவா் எத்தனை பூஜைகள் செய்தாலும், விரதங்கள் இருந்தாலும் ருத்ராட்சம் புனைவதற்கு ஈடாகாது என்பது ஆன்றோா் வாக்கு.

ருத்ராட்சகங்களை தனியாகவோ, பிற மணிகளுடன் மாலையாகக் கோத்தோ அணிவது வழக்கம். ஆயிரம் ருத்ராட்சங்கள் அணிந்தவரை சிவபெருமானுக்குச் சமம் எனக்கருதி தேவா்கள் தொழுவா் என்பதிலிருந்து அதன் பெருமையை அறியலாம்.

மன அமைதி, ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாக கூறப்படும் ருத்ராட்ச மரங்கள் இமயமலைச் சாரலிலும், நேபாளத்திலும் மட்டுமே வளரக் கூடியவை.

இந்த நிலையில், வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் உள்ள இரு ருத்ராட்ச மரங்கள் முதல் முறையாக மூன்று முகம் கொண்ட ருத்ராட்சங்களை காய்த்துள்ளன. இதையறிந்த மக்கள் மரத்தை வழிபட்டுச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.