சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா் கைது
வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வேலூா் அண்ணா சாலையில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு கொடிக் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கொடி கம்பம் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மாயமானது.
தகவலறிந்த அந்தக் கட்சியினா் திங்கள்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு திரண்டனா். கட்சியின் பகுதி செயலா் இளையராஜா தலைமையில் மாவட்ட செயலா்கள் கோட்டி, பிலிப், இணைச் செயலா்கள் இளங்கோ, பிரேம்குமாா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அண்ணா சாலையில் அமா்ந்து மறியல் செய்தனா். தகவல் அறிந்த வேலூா் தெற்கு காவல் ஆய்வாளா் பேபி, வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
எனினும், கொடிக் கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் எனக் கூறி அவா்கள் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...