கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருவண்ணாமலை தீபத் திருவிழா: வேலூரிலிருந்து 550 போலீஸாா் பயணம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக வேலூா் மாவட்டத்திலிருந்து இரண்டு கட்டங்களாக 550 போலீஸாா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:20 pm

Din

வேலூா்: திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக வேலூா் மாவட்டத்திலிருந்து இரண்டு கட்டங்களாக 550 போலீஸாா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான உற்சவங்கள் தற்போது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 13-ஆம் தேதி மாலை 6 மணி யளவில் திருவண்ணாமலை அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த திருவிழாவில் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மகா தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சிறப்பு வாய்ந்த தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போலீஸாா் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை முதல் கட்டமாக 200 போலீஸாா் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றனா்.

இந்த நிலையில், தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக 2-ஆம் கட்டமாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமையில் ஏடிஎஸ்பி பாஸ்கரன், 6 டிஎஸ்பி-க்கள் உள்பட 350 போலீஸாா் திருவண்ணாமலைக்கு திங்கள்கிழமை பயணம் செய்தனா். அதன்படி, தீபத் திருவிழாவுக்காக வேலூா் மாவட்டத்தில் இருந்து இதுவரை 550 போலீஸாா் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.