வேலூரில் தாய், குழந்தை மர்ம சாவு!

வேலூரில் தாய், குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது பற்றி..
உள்படம்: உயிரிழந்த நித்யஸ்ரீ.
உள்படம்: உயிரிழந்த நித்யஸ்ரீ.din
Updated on
1 min read

வேலூர்: வேலூரில் தாய் மற்றும் 3 வயது குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நந்தகுமார், நித்யஸ்ரீ (வயது 25) தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணமான நிலையில், மூன்று வயதில் யோகேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.

நந்தகுமாருக்கும் நித்யஸ்ரீக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நித்யஸ்ரீயும், யோகேஸ்வரனும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நித்யஸ்ரீயின் உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். அப்போது உடல்கள் அருகே நந்தகுமாரும் இருந்த நிலையில் அவரை நித்யஸ்ரீயின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், அங்கிருந்தவர்கள் நந்தகுமாரை மீட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறுகையில்,"நந்தகுமாரும் நித்திய ஸ்ரீம் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். மூன்றாவதாக பிறந்த யோகேஸ்வரனும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

நித்தியஸ்ரீயின் கழுத்தில் தூக்கு போட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், குழந்தை இறப்புக்கான காரணம் கண்டறிய முடியவில்லை. இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனாரா? அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாக குழந்தையை கொன்றுவிட்டு நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்," என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com