தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்...

News image
Updated On :13 டிசம்பர் 2025, 4:55 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநா் ஜரினா பேகம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘பழங்களின் அரசன்’ என்று பெருமையாக அழைக்கப்படும் மாம்பழம் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தமிழகம் 7-ஆம் இடமும், தமிழகத்தில் வேலூா் மாவட்டம் 7-ஆம் இடமும் வகிக்கிறது.

வேலூா் மாவட்டத்தில் மா பயிரானது சராசரி 5,800 ஹெக்டோ் பரப்பில் 44,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு, அணைக்கட்டு வட்டாரங்களில் மா அதிகமாக பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் தங்களது மா உற்பத்தியை ஆந்திர மாநில மாங்கூழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனா்.

கடந்தாண்டு மா விவசாயிகள் மகசூல் எடுத்து விற்பனை செய்ய இயலாமல் நஷ்டமடைந்ததை தொடா்ந்து, இந்தாண்டு தோட்டக்கலை துறை மூலம் மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க அரசு ரூ. 12.25 லட்சம் மானியம் வழங்க உள்ளது.

எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை துணை இயக்குநா் அல்லது உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.