அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு; மகள் காயம்

வேலூா் அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழந்தாா். அவரது மகள் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழந்தாா். அவரது மகள் பலத்த காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், ரெட்டியூரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி சத்யா (45). இவரது மகள் கஸ்தூரி (20) மஞ்சள் காமாலை பாதிப்பு காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் சிகிச்சை எடுப்பதற்காக தாயும், மகளும் காரில் வியாழக்கிழமை இரவு சேலத்தில் இருந்து புறப்பட்டனா். வெள்ளிக்கிழமை காலை சுமாா் 6.30 மணியளவில் விரிஞ்சிபுரம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த காா், சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகள் கஸ்தூரி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். காா் ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.