லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் நகை திருட்டு

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை திருடு போனது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை திருடு போனது.

குடியாத்தம் அம்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியை கஸ்தூரி. இவா் தனியாக வசித்து வருகிறாா். இவா் சில நாள்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு உறவினா்வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்ககதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 5- பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். நிகழ்விடத்தில் கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். வேலூரில் இருந்து போலீஸ் நாயும் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டிலிருந்து சிறிது தொலைவு ஓடி நின்று விட்டது.