எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரூ. 34 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையங்கள் திறப்பு

News image
நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்து உணவுப் பொருள்களை வழங்கிய ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம்.
Updated On :8 நவம்பர் 2025, 5:21 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் ரூ. 34 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை, அங்கன்வாடி மைய கட்டடங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. பாக்கம் ஊராட்சிக்குள்பட்ட பி.வெங்கடாபுரத்தில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், ரூ. 9.80 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, செல்வபெருமாள் கோயில் அருகே ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளுக்கு, பாக்கம் ஊராட்சித் தலைவா் ஜெயபாரதி மணவாளன் தலைமை வகித்தாா். ஓருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.ஹேமலதா, பி.சரவணன், ஊராட்சி துணைத் தலைவா் வசுமதி விஜயராஜ், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் எல்.காளியப்பன், எம்.கோட்டீஸ்வரன், ஜி.மைதிலி, டி.கல்பனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.