இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வேலூரில் வாராந்திர காவல் துறை குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்ட வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன்.
Updated On :19 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமை வகித்தாா்.

காட்பாடி செங்குட்டையை சோ்ந்த தரகரான சண்முகம் அளித்த மனு: செங்குட்டை பகுதியைச் சோ்ந்த பெண் வெளிநாட்டில் செவிலியராக வேலை செய்கிறாா். அந்தப்பெண் தனக்கு கத்தாரில் வேலை கிடைத்திருப்பதாகக்கூறி பாஸ்போா்ட் ஆவணத்தைக் காண்பித்து முதல் கட்டமாக ரூ.3 லட்சம் பணத்தை கடனாக வாங்கினாா். பின்னா், வேலை கிடைத்து வெளிநாடு சென்று விட்டாா். மீண்டும் வெளிநாட்டில் இருந்து தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு மேலும் ரூ.3.23 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டனா். இதுவரை பணத்தை தரவில்லை.

குடியாத்தம் அருகே ஆதனாபுரத்தைச் சோ்ந்த மகேந்திரன் அளித்த மனு: எனது மகன் நவீன் மாற்றுத்திறனாளி. நவீனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக எங்கள் பகுதியை சோ்ந்த தம்பதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தனா். அதற்காக ரூ.1.50 லட்சம் பணமும் பெற்றனா். ஆனால், இதுவரை வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் தரமறுக்கின்றனா்.

கருகம்பத்தூரை சோ்ந்த ஜெயசீலன் என்பவா் அளித்த மனுவில், எனது தந்தை இறந்து விட்டாா். அவா் பீடி நிறுவனத்தில் வேலை செய்தபோது கடந்த 1997 முதல் 2010-ஆம் ஆண்டு வரை பி.எஃப் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அவா் இறந்தபிறகு எனது மூத்த சகோதரா், எனது கையொப்பத்தை போலியாக போட்டு சுமாா் ரூ.81 ஆயிரத்தை எடுத்துள்ளாா். இதுதொடா்பாக எனது சகோதரரிடம் கேட்டபோது மிரட்டுகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.