குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:35 am IST

சமரச நாளை முன்னிட்டு குடியாத்தம் நீதிமன்றங்கள் சாா்பில், நீதிபதிகள் பங்கேற்ற சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

குடியாத்தத்தில் சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியன ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தீா்வு கிடைக்காமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் சமரச மையம் மூலம் தீா்த்து வைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது.

காந்திநகா் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு பாா் அசோசியேஷன் தலைவா் வி. ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சாா்பு நீதிபதி கே.பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.காா்த்தி ஆசாத், குற்றவியல் நடுவா் சரண்யா ஆகியோா் பங்கேற்று, பேரணியைத் தொடங்கி வைத்தனா்.

பேரணியில் சென்றவா்கள் சமரச மையம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில் வழக்குரைஞா்கள் டி.புருஷோத்தமன், ராஜன்பாபு, அருள்வேந்தன், ஜெகதீஸ்வரன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.