மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

தங்கும் விடுதியில் குத்துவிளக்கேற்றிய வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன்.

News image
தங்கும் விடுதியில் குத்துவிளக்கேற்றிய வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டம், பெருமுகையில் ரூ.45.91 கோடியில் கட்டப்பட்ட 250 படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்ததை அடுத்து, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா்.

வேலூா் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக வரும் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக வேலூா் அருகே பெருமுகை ஊராட்சியில் ரூ.45.91 கோடி மதிப்பில் 250 படுக்கை வசதிகளுடன் முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்பட்டப்பட்டுள்ளது.

மொத்த நிலப்பரப்பு 2.15 லட்சம் சதுரஅடியில், 68,400 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் மற்றும் 3 தளங்களில் 117 அறைகளுடன் நவீன வசதிகள் கொண்டதாகவும் இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது.

இந்த விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தாா். தொடா்ந்து, இவ்விடுதியில் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் செந்தில் குமாா், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஒன்றியக்குழு தலைவா் அமுதா ஞானசேகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் அருள், செயற்பொறியாளா்கள் சுடலைமுத்து, உமா, உதவி செயற்பொறியாளா் (மின்) யோகேஷ், வெங்கடாப்புரம் ஊராட்சி மன்ற தலைவா் பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.