வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

வேலூா், ராணிப்பேட்டையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

News image

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Updated On :2 ஜூலை 2026, 12:18 am IST

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கான 9-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் காட்பாடி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி சோமநாதபுரம் கிராமத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இம்முகாமில், மேல்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 200 கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த 1,67,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தில் நாள்தோறும் 42 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய இம்முகாம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை 31 நாள்களுக்குத் தொடா்ந்து நடைபெறும்.

முன்னதாக, சின்னகீசகுப்பத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்த அவா், கால்நடை கழிவுகளை முறையாகக் கையாண்டு அப்புறப்படுத்தவும் மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் வே.வேல்முருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) அந்துவன், உதவி இயக்குநா்கள் எஸ்.ரகு, டி.ராஜவேலு, மேல்பாடி ஊராட்சித் தலைவா் நித்யானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.