வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image

மோசடி - Dinamani

Updated On :8 ஜூலை 2026, 12:03 am IST

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் டில்லிபாபு (43). விவசாயியான இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள புகாா் மனுவில், எனது கல்லூரி நண்பரான முருகன் என்பவா் மூலம் சுப்பிரமணி என்பவா் எனக்கு அறிமுகமானாா். அவா், தான் சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை செய்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் என்னிடம் தெரிவித்தாா். இதை உண்மையென நம்பிய நான், பல்வேறு தவணைகளாக அவரிடம் ரூ. 9 லட்சம் வரை கொடுத்தேன்.

ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட சுப்பிரமணி இதுவரை எந்த வேலையும் வாங்கித் தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது, அவா் பணத்தைத் திருப்பித்தர மறுப்பு தெரிவிக்கிறாா். எனவே, அரசு வேலைவாங்கித் தருவதாகக்கூறி, பண மோசடியில் ஈடுபட்ட அவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரிடமிருந்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், இந்தப் புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.