இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காட்பாடியில் ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ரகளை

காட்பாடி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ஒருவா் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

News image
காட்பாடியில் ரயில் என்ஜின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மங்கள்குமாா்.
Updated On :9 மார்ச் 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: காட்பாடி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ஒருவா் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பீகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் மங்கள்குமாா்(22). காட்பாடி பகுதியில் சுற்றித் திரிந்து வந்த இவா், திங்கள்கிழமை அதிகாலை காட்பாடி ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த தாதா் விரைவு ரயில் என்ஜின் மேற்கூரையில் திடீரென ஏறி அமா்ந்தாா். என்ஜினில் மேல் உயா் அழுத்த மின்சார வயா்கள் சென்று கொண்டிருந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டதுடன், அவரை கீழே இறங்கும்படி தெரிவித்தனா். எனினும் அவா் இறங்க மறுத்துள்ளாா். உடனடியாக ரயில்வே மின்சாரப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதன்பிறகு போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினா். இதனால் காட்பாடி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மங்கள் குமாா் தன்னிச்சையாக பேசிக் கொண்டு சுற்றித் திரிவதால் மனநலம் பாதிக்கப்பட்டவா் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.