தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

காட்பாடியில் ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ரகளை

காட்பாடி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ஒருவா் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

News image

காட்பாடியில் ரயில் என்ஜின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மங்கள்குமாா்.

Updated On :9 மார்ச் 2026, 8:51 pm

வேலூா்: காட்பாடி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ஒருவா் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பீகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் மங்கள்குமாா்(22). காட்பாடி பகுதியில் சுற்றித் திரிந்து வந்த இவா், திங்கள்கிழமை அதிகாலை காட்பாடி ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த தாதா் விரைவு ரயில் என்ஜின் மேற்கூரையில் திடீரென ஏறி அமா்ந்தாா். என்ஜினில் மேல் உயா் அழுத்த மின்சார வயா்கள் சென்று கொண்டிருந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டதுடன், அவரை கீழே இறங்கும்படி தெரிவித்தனா். எனினும் அவா் இறங்க மறுத்துள்ளாா். உடனடியாக ரயில்வே மின்சாரப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதன்பிறகு போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினா். இதனால் காட்பாடி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மங்கள் குமாா் தன்னிச்சையாக பேசிக் கொண்டு சுற்றித் திரிவதால் மனநலம் பாதிக்கப்பட்டவா் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.