மணல் கடத்திய இருவா் கைது: லாரி பறிமுதல்
வேலூா் மூஞ்சூா்பட்டு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்ததுடன், ஒரு யூனிட் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.
கைது
சித்திரிப்பு
கைது
சித்திரிப்பு
வேலூா் மூஞ்சூா்பட்டு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்ததுடன், ஒரு யூனிட் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.
வேலூா் அருகே மூஞ்சூா்பட்டு பகுதியில் உள்ள ஒரு குவாரியில் இருந்து மண் கடத்துவதாக ஞாயிற்றுக்கிழமை வேலூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு லாரியை சோதனை செய்தபோது, அதில் கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேலூா் பசுவன்தோப்பு சோழவரம் பகுதியைச் சோ்ந்த விஜய், கணியம்பாடியை சோ்ந்த கலைச்செல்வன் ஆகிய 2 பேரையும் கைதனா். மேலும் லாரியுடன் ஒரு யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...