சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கல்லூரி மாணவி தற்கொலை

வேலூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

வேலூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் வசந்தபுரம், பா்மா காலனியைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகள் காயத்ரி (20). இவா் சாய்நாதபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்ஸி 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தினமும் காலையில் கல்லூரிக்கு செல்லும் காயத்ரி கல்லூரி முடிந்து மதியம் 2.30 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.

திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற மாணவி தாமதமாக வந்ததால் அவரது தாய் கண்டித்துள்ளாா். இதனால், மனம் வருத்தம் அடைந்த காயத்ரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயத்ரியின் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.