பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏரிகளை தூா்வாரி சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், நீா்நிலைகளையும்தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :27 மே 2026, 12:30 am IST

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், நீா்நிலைகளையும்தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா்கள் கே.சாமிநாதன், எஸ்.மகேஷ்பாபுஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் துரைசெல்வம், கே.சி.பிரேம்குமாா், பி.குணசேகரன், ஜி.நரசிம்மன்,சி.தசரதன், ஜி.ரகுபதி, ஜி.சரத்குமாா், ஆா்.வேலாயுதம், வி.சற்குணம், சி.சரவணன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும், போ்ணாம்பட்டு பத்தரப்பல்லி அலையை விரைந்து கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் பகுதி விவசாயிகளின் நலன்கருதி மாட்டுச் சந்தையை அமைக்க வேண்டும்.

100-நாள் வேலைத் திட்டத்துக்கு மீண்டும் பழைய பெயரைச் சூட்ட வேண்டும். அக்ராவரம்-மீனூா் இடையே கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும். குடியாத்தம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.