பெ.நா.பாளையம், அக். 8: துடியலூர் காவல் நிலையத்தில் போலீஸôருக்கும் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, ஐந்து போலீஸôர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
÷வழக்குரைஞரான ஆனந்தீஸ்வரன் வழக்கு தொடர்பாக இங்கு சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சப்இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, தலைமைக் காவலர் கோபாலகிருஷ்ணன், காவலர்கள் சின்னராஜ், முகமது இஸ்மாயில், சுஜி ஆகியோர் வழக்குரைஞரைக் தாக்கியுள்ளனர்.
÷இதையடுத்து, கோவை வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் உள்பட 50க்கு மேற்பட்ட வழக்குரைஞர்கள் காவல்நிலையத்தை முற்றுக்கையிட்டு, சம்பந்தப்பட்ட போலீஸôர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
÷எஸ்.பி உமா, ஆர்.டி.ஓ சாந்தகுமார், தாசில்தார் வீரபத்திரன் ஆகியோர் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 1 மணிவரை நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஐந்து போலீஸôரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
÷மேலும் இவர்கள் மீது கொலை முயற்சி, சட்ட விரோதமாகக் கூடுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குரைஞர்கள் முற்றுகையைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
நீதி விசாரணைக்கு
ஆட்சியர் உத்தரவு:
துடியலூர் காவல் நிலையத்தில் வழக்குரைஞர் ஆனந்தீஸ்வரன் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியருமான மு.கருணாகரன் பிறப்பித்த உத்தரவு:
÷கோவை துடியலூர் காவல் நிலையத்தில் கடந்த அக். 7ம் தேதி காவல் துறையினர் வழக்குரைஞர் ஆனந்தீஸ்வரன் என்பவரைத் தாக்கியதாக எழுந்த பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு காவல் நிலை ஆணை 151-ன் கீழ் முழுமையான நீதி விசாரணை மேற்கொண்டு விவரமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோவை உட்கோட்ட நடுவரான வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








