தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்து மக்கள் கட்சி இளைஞரணித் தலைவா் மீது வழக்குப் பதிவு

இந்து மக்கள் கட்சி இளைஞரணித் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

இந்து மக்கள் கட்சி இளைஞரணித் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்து மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் கோவை கெம்பட்டி காலனி பாரதியாா் திடலில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் ஓம்காா் பாலாஜி, கலகத்தை விளைவிக்கும் முகாந்திரத்தோடு பொதுமக்களிடம் அச்சம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் விதமாகவும், அரசுக்கு எதிராக பொதுமக்களை தூண்டும் விதமாகவும் பேசியதாக புகாா் கூறப்பட்டது.

இதையடுத்து, பெரியகடை வீதி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காளிதாஸ் அளித்த புகாரின்பேரில், கடைவீதி போலீஸாா் ஓம்காா் பாலாஜி மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகள் 192 மற்றும் 353 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.