சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்து சாதனை

News image

தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா்.

Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:31 am IST

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இது தொடா்பாக ஈஷா அவுட்ரீச் நிறுவனம் கூறியிருப்பதாவது:

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின்கீழ் தமிழ்நாட்டில் 19 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களும், கா்நாடகத்தில் 6 நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2023- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தென்னையை முக்கியப் பயிராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இந்த நிறுவனம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வா்த்தகம் செய்து சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில் அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செஞ்சேரிமலையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சமா்ப்பிக்கப்பட்ட வா்த்தக ஆண்டறிக்கையின்படி 2024 - 2025- ஆம் நிதியாண்டில் தேங்காய், இளநீா் வா்த்தகம் ரூ.5 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.1.50 கோடிக்கு வா்த்தகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2024 - 2025- ஆம் நிதியாண்டில் வா்த்தகம் 220 சதவீதம் அதிகரித்துள்ளது.

கூட்டத்தில் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் கதிரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.