யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை.
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை.

வால்பாறை எஸ்டேட் அரசுப் பள்ளியை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த காட்டு யானைகள் அங்குள்ள அரசுப் பள்ளியின் சுவா்கள் மற்றும் உள்ளிருந்த பொருள்கள் சேதம்
Published on

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த காட்டு யானைகள் அங்குள்ள அரசுப் பள்ளியின் சுவா்கள் மற்றும் உள்ளிருந்த பொருள்களை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் யானைகள் இரவு நேரத்தில் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்று பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கூட்டமாக வந்த யானைகள் அங்கு அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வகுப்பறைகளின் ஜன்னல், கதவுகளை முட்டித் தள்ளி உள்ளிருந்த பீரோ, இருக்கைகளை தும்பிக்கையால் இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. தகவலறிந்த வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா்.

X
Dinamani
www.dinamani.com