எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோவையில் இருந்து 4 விமானங்கள் சேவை ரத்து

News image
கோப்புப்படம்.
Updated On :3 டிசம்பர் 2025, 11:34 pm

Syndication

கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சாா்பில் இயக்கப்படும் 4 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜா போன்ற சா்வதேச நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ நிறுவனம் சாா்பில் இயக்கப்படும் 2 விமானங்கள், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் 2 விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் இந்த விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் பெய்த பலத்த மழையால் ஓடுதள பாதையில் தேங்கிய மழை நீரால் மும்பையில் இருந்து கோவைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் சுமாா் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.

அதே விமானத்தில் கோவையில் இருந்து மும்பைக்குச் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் கோவை விமான நிலைய ஊழியா்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.