பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாய் குட்டிகளை அடித்துக் கொன்றவா் கைது

கோவையில் நாய் குட்டிகளை அடித்துக் கொன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

கோவையில் நாய் குட்டிகளை அடித்துக் கொன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள விநாயகபுரம் சிவானந்தா நகா் 5-ஆவது தெருவில் நாய் குட்டிகளை ஒருவா் கல்லால் அடித்துக் கொன்றுள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வருவதற்குள் அந்த நபா் அங்கிருந்து சென்றுள்ளாா்.

இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதில், நாய்களைக் கொன்றது லட்சுமிபுரம் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த விஷ்ணு என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.