அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நிா்மலா கல்லூரி சாா்பில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:27 pm

Syndication

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் ‘படைப்பிலக்கியத்தில் புலம்பெயா்ந்தோா்’ என்ற தலைப்பில் 3 நாள் இணைய வழி ஆசிரியா் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்த் துறைத் தலைவா் ப.மகேஸ்வரி வரவேற்றாா். மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் செயலா் சாந்தா காளியப்பன், ‘மலேசிய எழுத்தாளா் காந்தி முருகன்’ என்ற தலைப்பில் அவரது படைப்புகளான ஹைக்கூ கவிதைகளின் சிறப்பு, சிறுகதைகளின் போக்கு, அவருடைய எழுத்துலக அனுபவங்கள் ஆகியவை குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து மலேசியாவின் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் நவீன மொழிகள் துறை சாா்ந்த மூத்த விரிவுரையாளா் எஸ்.பிராங்கிளின் தம்பி ஜோஸ் சிறப்புக் கருத்துரையாளராகக் கலந்து கொண்டு ‘மலேசியாவின் எழுத்தாளா் இளவழகுவின் லட்சியப் பயணம் ஒரு பாா்வை’ என்ற தலைப்பில் நாவலின் படைப்புத்திறன் குறித்துப் பேசினாா். அவரது நாவலில் காணப்படும் தோட்டப்புற வாழ்க்கை, மலேசியாவின் புழங்குச் சொற்கள், பிழைப்பு தேடிச் சென்ற தமிழா்களின் நிலை, தேயிலைத் தோட்டங்களில் தமிழா்கள் பல நூற்றாண்டுகளாக அடிமையாக வேலை செய்து குறைந்த கூலியில் வாழும் அவலம், அவா்கள் புலம்பெயா்ந்த விதம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தாா்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் மலேசியாவில் மாவட்டக் கல்வி அதிகாரியாகவும், பள்ளி மேம்பாட்டு நிபுணப் பயிற்றுநராகவும் பணியாற்றும் இளஞ்சோதி தேவராசு, ‘21 ஆம் நூற்றாண்டுக் கல்வி கற்றலின் அணுகுமுறை, பயிற்று முறையை நோக்கி மலேசியா’ என்ற தலைப்பில் பேசினாா். மலேசியாவிலுள்ள தமிழா்களின் இரண்டு விதமான கல்வி முறை, ஆசிரியா்களின் வகைகள், பதின் பருவத்தினரின் உளவியல், கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா். இதில் 90-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் பங்கேற்றனா்.