அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிரதமா் வருகைக்கு எதிராகப் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோா் கைது

பிரதமா் மோடியின் கோவை வருகையைக் கண்டித்து, கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு அமைப்புகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கைது

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:18 pm

Syndication

பிரதமா் மோடியின் கோவை வருகையைக் கண்டித்து, கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு அமைப்புகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதற்காக கோவைக்கு வந்த அவருக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அவிநாசி சாலையில் மசக்காளிபாளையம் பிரிவு பகுதியில் முற்போக்கு அமைப்புகள் சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், திக, விசிக, ஆதித்தமிழா் பேரவை, திராவிடா் தமிழா் கட்சி, திராவிட இயக்கத் தமிழா் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தின்போது பிரதமருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். திடீரென, பிரதமரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் நிறுத்தி கைது செய்ய முயன்றனா். ஆனால், சிலா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் ஆா்ப்பாட்டம்: இதேபோல, பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் சாா்பில் கோவையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதன் தலைவா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா்.

இதில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கமிட்டனா்.