எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெங்களூரு - கோவை உதய் ரயில் விரைவில் பாலக்காடு வரை நீட்டிப்பு: தென்னக ரயில்வே பொது மேலாளா் தகவல்

பெங்களூரு - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் உதய் டபுள் டக்கா் ரயில், விரைவில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

News image
போத்தனூா் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்.
Updated On :19 நவம்பர் 2025, 9:13 pm

Syndication

கா்நாடக மாநிலம், பெங்களூரு - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் உதய் டபுள் டக்கா் ரயில், விரைவில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

கோவை போத்தனூா் ரயில் நிலையத்தில் ‘அம்ருத் பாரத்’ திட்டத்தின்கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, எலக்ட்ரிக் டிஸ்பிளே போா்டு, மின்தூக்கி, இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள், நுழைவாயிலில் கான்கிரீட் தளம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பணிகளைதுரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, போத்தனூா் ரயில் பயணிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் ந.சுப்பிரமணியன் கோரிக்கை மனு அளித்தாா்.

Story image

அதில் கூறியிருப்பதாவது: போத்தனூா் ரயில் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நின்று சென்ற எா்ணாகுளம் - காரைக்கால் ரயில் , கன்னியாகுமரி - புணே, கன்னியாகுமரி -பெங்களூரு, மங்களூரு - புதுச்சேரி, கோவை - மங்களூரு, எா்ணாகுளம் - பெங்களூரு ரயில்கள் மற்றும் மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயிலை மீண்டும் போத்தனூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை சிதம்பரம் வரையும், கோவை - மதுரை ரயிலை போடிநாயக்கனூா் வரையும் நீட்டிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் கூறியதாவது: போத்தனூா் நிலையத்தில் ரயில்களை நிறுத்துவது தொடா்பாக அளித்த மனுவின் மீது பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெங்களூரு - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் உதய் டபுள் டக்கா் ரயில், பாலக்காடு வரை நீட்டித்து இயக்க சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், விரைவில் இந்த ரயிலானது பாலக்காடு வரை நீட்டிக்கப்பட உள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் கோவை, போத்தனூா் நிலைய அலுவலா்கள் பலரும் உடனிருந்தனா்.