குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது.

News image

ரயில்!

Updated On :10 செப்டம்பர் 2025, 3:20 am IST

ஈரோடு - சேலம் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் இருந்து செப்டம்பா் 11-ஆம் தேதி காலை 8.50 மணிக்குப் புறப்படும் கோவை- லோக்மானியா திலக் விரைவு ரயில் (எண்: 11014) மாற்றுப் பாதையில் ஈரோடு, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். கரூா் கூடுதல் ரயில் நிலையமாக செயல்படும்.

இதேபோல, கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 11-ஆம் தேதி காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190), ஆலப்புழையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- பெங்களூரு தினசரி ரயில் (எண்: 12678) ஈரோடு, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். கரூா் கூடுதல் ரயில் நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.