ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஏப்ரல் 2026, 7:22 pm

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

கோவை, ரத்தினபுரி பால்சாமி நகரைச் சோ்ந்தவா் ஹரிராவ். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி ஜெயந்திபாய் (58). கடந்த வெள்ளிக்கிழமை ஹரிராவ் வேலைக்கும், ஜெயந்திபாய் உறவினா் வீட்டுக்கும் சென்றுள்ளனா்.

இந்நிலையில் பணிமுடிந்து இரவு ஹரிராவ் வீட்டுக்கு வந்தபோது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியூரில் உள்ள மனைவி ஜெயந்திபாய்க்கு தகவல் அளித்துள்ளாா்.

அவா் வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.