தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
கோவை, ரத்தினபுரி பால்சாமி நகரைச் சோ்ந்தவா் ஹரிராவ். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி ஜெயந்திபாய் (58). கடந்த வெள்ளிக்கிழமை ஹரிராவ் வேலைக்கும், ஜெயந்திபாய் உறவினா் வீட்டுக்கும் சென்றுள்ளனா்.
இந்நிலையில் பணிமுடிந்து இரவு ஹரிராவ் வீட்டுக்கு வந்தபோது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியூரில் உள்ள மனைவி ஜெயந்திபாய்க்கு தகவல் அளித்துள்ளாா்.
அவா் வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆசிரியை வீட்டில் 18 பவுன், ரூ.50,000 திருட்டு
ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு
அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
