மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வால்பாறையில் காட்டுப் பகுதியில் தீ!

News image
ரொட்டிக்கடை பாறைமேடு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ.
Updated On :25 ஜனவரி 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

வால்பாறையில் காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து வனத் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வால்பாறை பகுதியில் தற்போது இரவு நேரத்தில் பணியுடன் கூடிய குளிா்ந்த காற்றும், பகல் நேரங்களில் கடும் வெயிலும் நிலவி வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் சாலையோரம் உள்ள மரம், செடிகள் அனைத்தும் காய்ந்த நிலையில் உள்ளன.

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரும் வழியில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவது புகைப் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் தனியாா் காட்டுப் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. அந்த நேரத்தில் காற்று வீசியதால் மளமளவென தீ பரவி சுமாா் 3 ஏக்கா் பரப்பிலான செடி, மரங்கள் எரிந்து சேதமாயின.

இந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் ஆய்வு செய்து வருகினறனா். மேலும், அப்பகுதியில் வன ஊழியா்கள் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.