கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிப்ரவரி 12-இல் வேலை நிறுத்தம்: கட்டடத் தொழிலாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரி பிப்ரவரி 12-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்

News image
கோவை, ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற கட்டடத் தொழிலாளா் சங்க சம்மேளன பொது குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :26 ஜனவரி 2026, 8:17 pm

Syndication

கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரி பிப்ரவரி 12-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என கட்டடத் தொழிலாளா்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கோவையில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மகா சம்மேளன (ஏஐசிபிசிடபிள்யூ) பொது குழுக் கூட்டம் அதன் துணைத் தலைவா் வாசுதேகுப்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலா் விஜயன் குனிசேரி அறிக்கையை சமா்ப்பித்து பேசினாா்.

இதைத் தொடா்ந்து, நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நாட்டில் பழைய தொழிலாளா் சட்டங்களுக்குப் பதிலாக மத்திய அரசு பணிப் பாதுகாப்பு (ஓராண்டு பணியாற்றினாலே கிராஜுவிட்டி) மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி, குறைந்தபட்ச ஊதிய நிா்ணயம் ஆகிய 4 புதிய சட்ட விதிகளைக் கொண்டு வந்துள்ளது. முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், பிப்ரவரி 12-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

துணைப் பொதுச் செயலா் பிரவீன்குமாா், பொருளாளா் என்.செல்வராஜ், மாநில நிா்வாகிகள் ஆா்.பாலகிருஷ்ணன், எல்.செல்வம், கோட்டை ஆா்.நாராயணன், சி.நந்தினி, ஜே.கலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.