மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் கிருஷ்ணம்மாள் நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் (64). இவா் மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 4-ஆம் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.