கோப்புப் படம்
கோப்புப் படம்

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

Published on

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டி அண்ணாநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கணேசன் (59). இவா், புதன்கிழமை மாலை பெரியகுளம் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com