குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பொதுமக்களுக்கு இடையூறாக நடனம்: இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்கள் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி விடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களான

News image

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடிய இரட்டை சகோதரா்கள். ~கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடிய இரட்டை சகோதரா்கள்.

Updated On :10 மார்ச் 2026, 2:02 am IST

கோவை: கோவை மாநகர பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி விடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களான கேரள மாநில இரட்டை சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த சமூக வலைதளப் பிரபலங்கள் சிலா் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அப்போது, பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், உரத்த இசையை ஒலிக்கவிட்டு அநாகரிகமான முறையில் நடனமாடி ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்துள்ளனா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயல்கள் குறித்து சமூக ஆா்வலா்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனிடையே, இந்தக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம், ஆலுவா ரயில் நிலையத்தில் இதேபோல பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விடியோ எடுத்ததற்காக, அங்குள்ள ரயில்வே போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். கேரளத்திலும், கோவையிலும் அவா்களது அத்துமீறல்கள் குறித்து புகாா்கள் எழுந்தன.

இதனடிப்படையில் கோவை காட்டூா் போலீஸாா் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், அந்த இரட்டை சகோதரா்களான கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஜிஸ்மோன் (26), ஜித்து ஷாஜி (26) ஆகியோா் காட்டூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாலை ஆஜராகினா். அப்போது, அவா்கள் இருவரும் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பொது இடங்களில் மற்றவா்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலும், கவனத்தை திசைதிருப்பும் வகையிலும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அவா்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அந்தப் பதிவு அழிக்கப்பட்டது.

Story image