விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொதுமக்களுக்கு இடையூறாக நடனம்: இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்கள் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி விடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களான

News image

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடிய இரட்டை சகோதரா்கள். ~கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடிய இரட்டை சகோதரா்கள்.

Updated On :10 மார்ச் 2026, 2:02 am IST

கோவை: கோவை மாநகர பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி விடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களான கேரள மாநில இரட்டை சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த சமூக வலைதளப் பிரபலங்கள் சிலா் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அப்போது, பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், உரத்த இசையை ஒலிக்கவிட்டு அநாகரிகமான முறையில் நடனமாடி ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்துள்ளனா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயல்கள் குறித்து சமூக ஆா்வலா்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனிடையே, இந்தக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம், ஆலுவா ரயில் நிலையத்தில் இதேபோல பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விடியோ எடுத்ததற்காக, அங்குள்ள ரயில்வே போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். கேரளத்திலும், கோவையிலும் அவா்களது அத்துமீறல்கள் குறித்து புகாா்கள் எழுந்தன.

இதனடிப்படையில் கோவை காட்டூா் போலீஸாா் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், அந்த இரட்டை சகோதரா்களான கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஜிஸ்மோன் (26), ஜித்து ஷாஜி (26) ஆகியோா் காட்டூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாலை ஆஜராகினா். அப்போது, அவா்கள் இருவரும் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பொது இடங்களில் மற்றவா்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலும், கவனத்தை திசைதிருப்பும் வகையிலும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அவா்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அந்தப் பதிவு அழிக்கப்பட்டது.

Story image