பெரியாரின் நினைவு நாளையொட்டி கோவையில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், சித்தாபுதூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார் முன்னிலையில், மாநில அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் புலியகுளத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் மண்டல செயலர் சந்திரசேகர் தலைமையில் மூத்த தொண்டர் வசந்தம் கு.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்டத் தலைவர் சிற்றரசு, செயலர் செந்தில்நாதன், பொதுக் குழு உறுப்பினர் அன்பரசு, கவி.கிருட்டிணன், புலியகுளம் வீரமணி, சக்தி, மே.ப.ரங்கசாமி, திமுக, கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






