டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா நிரப்பிய சிகரெட்டை விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:24 am

DIN

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா நிரப்பிய சிகரெட்டை விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை, பீளமேடு அருகே உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கஞ்சா நிரப்பிய சிகரெட்டை சிலர் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவின் உத்தரவின்பேரில் பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். 
அப்போது, கல்லூரி அருகே உள்ள கடைக்கு அருகில் கஞ்சா நிரப்பிய சிகரெட்டை மாணவர்களுக்கு விற்பனை 
செய்ததாக ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த பிரவீண் (23), ஷோபா நகரைச் சேர்ந்த கார்த்திக் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அங்குள்ள உணவகம் அருகே கஞ்சா விற்றதாக இளங்கோ நகரைச் சேர்ந்த பாபு (எ) தினேஷ் (23), வால்பாறை பன்னிமேட்டைச் சேர்ந்த அஜய்குமார் (21) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900 கிராம் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.