டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியில் ஆரோக்கியமான வாழ்வின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை மாணவர்களுடனான உரையாடல் நிகழ்வில் ஊட்டச்சத்து நிபுணர் ச.ஆ.ஹரிணி இன்றைய சூழலில் ஆரோக்கியமான வாழ்வின் முக்கியத்துவம் குறித்துப் பேசியதாவது: சிறுசிறு உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் நாம் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும். பாதாம் உள்கொள்வதுதன் மூலம் உடல் எடை , சர்க்கரை அளவு, இதயப் பாதுகாப்புக்கு நல்லது. தற்போது நாம் இயங்கிக் கொண்டிருக்கும் வேகமான உலகில் நம்முடைய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது.
ஆரோக்கியமான வாழ்வுக்கு அனைவரும் சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பாதாம் போன்ற பருப்புகளை உள்கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான புரதச்சத்து, வைட்டமின், நார்ச்சத்து போன்றவற்றை பாதாம் சேர்க்கப்பட்ட உணவு மூலம் பெற முடியும். பாதாம் போன்ற சத்து நிறைந்த பொருள்களால் ஆன உணவுப் பண்டங்களை உண்பது பல்வேறு நல்ல மாற்றங்களை உண்டாக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.