கோவை, நீலிகோணாம்பாளையம் அருகே ஆட்டோவில் சென்ற தம்பதியை மிரட்டி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபால் (61). இவர் விவசாயத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தாமணி (51). இவர்கள் இருவரும் நண்பர் வீட்டு திருமணத்துக்காக சில நாள்களுக்கு முன் திருக்கடையூர் சென்றுள்ளனர். இதன் பிறகு சனிக்கிழமை நள்ளிரவு பேருந்தில் கோவை திரும்பியுள்ளனர். பின்னர் ஒண்டிப்புதூரில் இறங்கி ஆட்டோவில் நீலிக்கோணாம்பாளையம் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற ஆட்டோவை இருவர் வழிமறித்துள்ளனர். மேலும், கோபால், சாந்தாமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருவரும் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சாந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசியப் போட்டிக்கான இந்திய பாட்மின்டன் அறிவிப்பு: பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் பங்கேற்பு
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்






