வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆட்டோவில் தம்பதியை மிரட்டி 5 பவுன் பறிப்பு

கோவை, நீலிகோணாம்பாளையம் அருகே ஆட்டோவில் சென்ற தம்பதியை மிரட்டி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :5 நவம்பர் 2018, 7:39 am IST

கோவை, நீலிகோணாம்பாளையம் அருகே ஆட்டோவில் சென்ற தம்பதியை மிரட்டி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபால் (61). இவர் விவசாயத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தாமணி (51). இவர்கள் இருவரும் நண்பர் வீட்டு திருமணத்துக்காக சில நாள்களுக்கு முன் திருக்கடையூர் சென்றுள்ளனர். இதன் பிறகு சனிக்கிழமை நள்ளிரவு பேருந்தில் கோவை திரும்பியுள்ளனர். பின்னர் ஒண்டிப்புதூரில் இறங்கி ஆட்டோவில் நீலிக்கோணாம்பாளையம் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற ஆட்டோவை இருவர் வழிமறித்துள்ளனர். மேலும், கோபால், சாந்தாமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருவரும் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சாந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.