கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மதுக்கரையில் ரேக்ளா பந்தயம்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி,  நவக்கரை ரேஸ் கிளப் சார்பில் கோவையை அடுத்த மதுக்கரையில் ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :5 நவம்பர் 2018, 7:40 am IST

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி,  நவக்கரை ரேஸ் கிளப் சார்பில் கோவையை அடுத்த மதுக்கரையில் ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மதுக்கரையை அடுத்த எட்டிமடை, காளியாபுரம் அருகே நடைபெற்ற இந்த பந்தயம் 200 மற்றும் 300 மீட்டர் என இரண்டு  சுற்றுகளாக நடத்தப்பட்டது. 
இதில் 350-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.  சமுக ஆர்வலர் அன்பரசன் ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார். 200 மீட்டர்  போட்டியில் கோவை வீரப்பனூரைச் சேர்ந்த அன்பு தினேஷ் முதலிடம் பெற்றார். பொள்ளாச்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் இரண்டாமிடம் வென்றார்.  300 மீட்டர் போட்டியில் பொள்ளாச்சியைச் சேர்ந்த  ஆறுச்சாமி முதல் பரிசையும், பெரிய முத்துசாமி இரண்டாம் பரிசையும் பெற்றனர். 
இதன் துவக்க நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம்,  முன்னாள் ஒன்றியத் தலைவர்  மகாலிங்கம், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தங்க  நாணயம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.