4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிப்பு

கோவையை அடுத்த குனியமுத்தூரில் முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர். 

Updated On :22 அக்டோபர் 2018, 2:25 am

கோவையை அடுத்த குனியமுத்தூரில் முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர். 
 கோவை, இடையர்பாளையம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி சாவித்திரி (55). இவர், அதே பகுதியில் உள்ள மளிகைக்கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் சாவித்திரியிடம் முகவரி கேட்பதுபோல அருகில் வந்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.