உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கூலித்தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

மகளிடம் தவறாக நடந்துகொண்ட கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:39 am IST

மகளிடம் தவறாக நடந்துகொண்ட கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
கோவை, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் சிறுமி அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தந்தை தன்னிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் தாயார், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.