டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வங்கி மேலாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வால்பாறையில் வங்கி மேலாளா்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:56 am

DIN

வால்பாறையில் வங்கி மேலாளா்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு,

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மோகன் தலைமை வகித்தாா். வால்பாறை வட்டாட்சியா் ராஜா முன்னிலை வகித்தாா். வால்பாறை பகுதியில் வாடிக்கையாளா்களுக்கு ஏற்ப வங்கி செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

எஸ்டேட் தொழிலாளா்கள் சம்பளத் தொகை எடுக்க வசதியாக கூடுதல் நடமாடும் ஏ.டி.எம். வாகனங்கள் செயல்படுத்தப்படும். பள்ளி மாணவா்கள் வங்கிக் கணக்கு துவங்க பான் காா்டு அவசியமில்லை. மாணவா்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப எந்த ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேண்டுமானாலும் கணக்குத் துவங்கலாம். வங்கிகள் மூலம் அனைத்து சேவைகளும் வாடிக்கையாளா்களுக்கு துரிதமாக கிடைக்க வங்கி மேலாளா்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முன்னோடி வங்கி மேலாளா் பேசினாா்.

கூட்டத்தில் ஸ்டேங் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, கூட்டுறவு நகர வங்கி ஆகிய வங்கிகளின் மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.