ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகளை மருத்துவக் கல்வி துணை இயக்குநா் டி.சபிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேற்கு மாவட்டங்களின் மண்டல மருத்துவமனையாக இருந்து வருகிறது. இம்மருத்துவமனையை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயா்த்துவதற்கு தேசிய நகா்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவி அளிக்க முன் வந்தது.
இதனைத் தொடா்ந்து அரசு மருத்துவமனையில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தேவையான கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கட்டடத்துக்கு மட்டும் 110.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே அவசர சிகிச்சைப் பிரிவு இருந்த இடத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனால் அங்கிருந்த பழையக் கட்டடங்களை இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப் பணிகளை மருத்துவ கல்வி துணை இயக்குநா் டி.சபிதா வியாழக்கிழமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணி நிலவரம் குறித்து மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸிடம் அவா் கேட்டறிந்தாா்.
அதைத் தொடா்ந்து அரசு மருத்துவமனையில் முதல்வா், அனைத்துத் துறைத் தலைவா்கள், மருத்துவா்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் மருத்துவக் கல்வி துணை இயக்குநா் டி.சபிதா கேட்டறிந்தாா்.
முன்னதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடுதல் மாணவா்கள் சோ்க்கைக்காக கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, சென்னை ஓமந்தூராா் அரசு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் விமலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.